|
வண்ட
லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கெளிதாம்
அதுநல் விதியாமே. 2 |
1995.
|
நாடெ
லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர்
தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள்
வினை நீங்கலுற்றாரே. 3 |
சூழ்ந்த வயல்களைச்
சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில்
வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை
வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே
நல்லூழையும் தருவதாகும்.
கு-ரை:
திரை - அலை. வங்கம் - மரக்கலம். கண்டல் - தாழை.
புடை - பக்கம்.
அலம்பிய
- ஒலித்த. விண்டல் - நீங்குதல். விதி -பாக்கியம்.
3. பொ-ரை:
நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள்
நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள்
தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர்,
வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும்
சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.
கு-ரை:
ஒளி-புகழ், விளக்கமுமாம், பொழிற்காடு-சோலைக் காடு.
தேனை மலர் துளிக்கும் காடு.
அக்காட்டையுடைய
கடற்காழி. சங்கக்குழை-சங்கினாலாகிய குண்டலம்.
வேடம்-சிவவேடம்.
|