பக்கம் எண் :

603

49. சீகாழி

பதிக வரலாறு:

     137ஆவது பதிகத்தில் காண்க.

பண்: சீகாமரம்

ப.,தொ.எண்: 185                             பதிக எண்: 49

திருச்சிற்றம்பலம்

1993.







பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர்
     பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணி னேரயலே
     பொலியுங் கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு
     மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார்
     அருளாலுங் குறைவிலரே.      1

1994.



மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
     மோதி மீதெறி சங்க வங்கமுங்
கண்டலம் புடைசூழ்
     வயல்சேர் கலிக்காழி


     1. பொ-ரை: பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர்
பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை
அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே
எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு
அருளாலும் குறைவிலர்.

     கு-ரை: பண்ணின்-பண்ணிசையின்பத்தை. நேர்-ஒத்த. கண்ணின்
நேர்-கண்ணெதிரில். பெண். . . . . .பங்கு-மாதியலும்பாதி, உன்னும்-தியானம்
புரியும். ‘அருளாலும்’ என்ற உம்மை இம்மைக் குரிய பொருளாலும் அன்றி
என்று இறந்தது தழீஇயிற்று.

     2. பொ-ரை: நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள்
மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள்