2225.
|
வெங்குருத்
தண்புகலி வேணுபுரஞ் சண்பை
வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம
புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண்
டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங்
கருது மூரே. 4 |
2226.
|
தொன்னீரிற்
றோணிபுரம் புகலி வெங்குருத்
துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர்
எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன்
நகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம்
புகழு மூரே. 5 |
4.
பொ-ரை:
நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம்
உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த
சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.
கு-ரை:
தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய
தோணிபுரம் என்றதால், தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு -
கூடிய. தொல் - பழைய. பொழில் - சோலை. தலைபண்டு ஆண்டமூதூர் -
சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான்.
5.
பொ-ரை:
நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம்
முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல
பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய
கழுமலமாகும்.
கு-ரை:
தொல் நீர் - பழைய பிரளய வெள்ளம். துயர் - பிறவித்துயர்
(பிறதுயர்கள் இதனுள் அடக்கம்). இன்நீர் - இனிய நீரினை
|