3686. |
ஒருவரையு
மேல்வலிகொ டேனெனவெ |
|
ழுந்தவிற
லோனிப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ
வெனவெ குண்ட
கருவரையு மாழ்கடலு மன்னதிறல்
கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ
தவளிவண லூரே. 8 |
ததும்பும். ஆதலால்
அதனை அம்புசெய்து - என்பதனால் தெரிவித்தார்.
அம்புசெய்து - தண்ணீர் விசிறச்செய்து எனக் கொள்ளல் வேண்டும். பேர்
இடபமோடும் - பெரிய இடபவாகனத்தோடும். காடு - சுடுகாட்டில். அரவம்
ஆகு - சடசட ஒலிக்கும் ஓசையையுடைய. கனல் கொண்டு -
நெருப்பையேந்தி, இரவில் நின்று நடம் ஆடி. அரவம் ஆர்த்த - பாம்பைக்
கச்சாகக் கட்டிய பெருமான். இதன் கருத்து; மொந்தை முதலிய வாத்தியங்கள்
ஒலிக்கச் சடையிற் கங்கைநீர் ததும்பக் கனலேந்தி, இரவில், இடபமோடும்
நின்று நடம் ஆடிப் பாம்பைக் கட்டிய பெருமான் உறைவது அவளிவள்
நல்லூர் என்பதாம். அறக்கடவுளே இடபமாகலான் மகா சங்கார காலத்தும்
அழியாது நிற்க, அதனோடும் நின்று நடம் ஆடி என்றார்.
8.
பொ-ரை: எனக்கு மேல் ஒருவரையும் வலிமையுடையவராகக்
காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து, இக்கயிலைமலையின் மேல்ஒரு
பெருமான் உளனோ என வெகுண்டு, மலையைப் பெயர்த்த பெரியமலை
போன்றும், ஆழமான கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான
இராவணனைத் தன்காற் பெருவிரலை ஊன்றி, அம்மலையின்கீழ் நெரியும்படி
செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும்
திருத்தலமாகும்
. கு-ரை:
மேல் - எனக்குமேல், ஒருவரையும், வலிகொடேன் -
வலிமையுடையவராகக் காணப்பொறேன் என எழுந்த. விறலோன் -
வலியோனாகிய (இராவணன்) 'இப்பெருவரையின் மேல்ஓர் பெருமானும்
உளனோ' எனக் கோபித்த. கருவரையும் - கரியமலையும். ஆழ்கடலும்,
அன்ன - போன்ற. மலைபோன்ற (திறல்) வலிமை. கடல் போன்ற கைகள்
என்க. உடையானை - உடையவனாகிய இராவணனை. அரு, வரையில் -
(கயிலை) மலையின் கீழ். ஊன்றி - விரல் ஊன்றி. அடர்த்தான் உறைவது
அவளிவள்நல்லூரே.
|