பக்கம் எண் :

1052திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

மொச்சைய வமணரு முடைபடு துகிலரு
     மழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி
     மிழலையே.                         10

3722. உன்னிய வருமறை யொலியினை முறைமிகு
       பாடல்செய்
இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி
     மிழலையை
மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன
     வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி
     பெறுவரே.                          11

திருச்சிற்றம்பலம்


ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான
வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம்
கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: இடுபலி இனிது என இச்சையினராய், மகிழ்வது (ஓர்) பிச்சையர்
- மகிழ்ந்தேற்கும் பிச்சையுணவுடையவர். ஓர் அசைநிலை “மார்கழி நீர்
ஆடேலோ ரெம்பாவாய்” (தி.8 திருவெம்பாவை. பா.20.) “அஞ்சுவ தோரும்
அறனே” என்புழி (குறள் 366) வந்தமைபோல. அத்தகைய
பிச்சையினரெனினும், (அவர்) பெருமையை. இறை - ஒரு சிறிதும். பொழுது
- எப்பொழுதும். அறிவு என - (நம்மால்) அறிதல் (முடியும்) என்று. உணர்வு
இலர் - (எவராலும்) உணரப்படாதவர். மொச்சைய - (நீராடாமையால்):
துர்நாற்றத்தையுடைய, அமணரும், முடைபடுதுகிலினர் (ஒலித்
துடுத்தாமையால்) முடை நாற்றத்தையுடைய ஆடையைப் போர்ப்பவராகிய
புத்தரும். அழிவது ஓர் விச்சையர் - அழிவதற்குக் காரணமான வித்தை
செய்பவர். விச்சையர் என்பதற்கு “குழலன் கோட்டன் குறம்பல்லியத்தன்
என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்தாங்கு (திருமுருகாற்றுப் படை)
உரைக்க.

     11. பொ-ரை: இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும்
அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும்