பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)91. திருவடகுரங்காடுதுறை1109

எட்டுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
     பெறுவது திண்ணமாமே.               10

3787. தாழிளங் காவிரி வடகரை
       யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
     சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம்
     பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார்
     நீடுவா னுலகினூடே.                 11

திருச்சிற்றம்பலம்


திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின்
திருவடிகளைத் தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.

     கு-ரை: கட்டு - கட்டுப்பாட்டையுடைய. அமண் (உம்) தேரரும் -
அமணரும், புத்தரும். அமண்:- தூது, அரசு என்பன போல விகுதி
தொக்குநின்றது. கடுக்கள் தின் - கடுக்காய்களைத் தின்கின்ற. கழுக்கள் -
கழுந்து போல்பவர். கசிவு - மன விரக்கம். பிட்டர் - விலக்கத்தக்கவரும். மயிர்பறித்த தலையினராதலின் அமணரைக் கழுக்கள் என்றார். பிட்டர் -
பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு. அறவுரை - தர்மோபதேசங்கள்.
கொள்ளலும் - கொள்ளன்மின் (கொள்ளும் உடம்பாடு) எதிர்மறைப் பன்மை
ஏவல் வினைமுற்று. கொள்+அல்+உம்; அல் - எதிர்மறை இடைநிலை. உம் -
ஏவற் பன்மை விகுதி. வரைப் பண்டம் - மலையில் உள்ள பொருள்கள்.
அவை:- முதல் ஐந்து பாடல்களிலும் கூறியவை. உந்தி எட்டும் - தள்ளிப்
பாயும். மா காவிரி “இடையுரி வடசொலின்” (நன்னூல் சூத். 239) என்னும்
விதிப்படி இயல்பாயிற்று. சிட்டன் - சீலத்தை விரும்புவோன், சிவபிரான்.
“சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை”. (தி.5.பா.81.பா.1)

     11. பொ-ரை: பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட
கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்,
பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட சடைமுடியுடைய