பக்கம் எண் :

1114திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3792. ஏனைவெண் கொம்பொடு மெழில்திகழ்
       மத்தமு மிளவரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
     கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந் தாடுவர்
     பாடுவ ரருமறைகள்
தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி
     யுறைசெல்வர் தாமே.                 5


     கு-ரை: அழகுபொருந்திய உமாதேவியார் ஒளியையுடைய வரிசையான
பற்களால் சிரிப்புடையவராய் அருகிலிருந்தருளவும், அதற்கேற்ற வண்ணம்
நடந்து கொள்ளாமல் பாம்பை அணிந்த. ஊருக்குப் புறம்பே உள்ளதாகிய
சுடுகாடு, நாடகமேடையாகக் கூத்து ஆடுதலைப் பேணியவராய் இருப்பர்,
திருநெல்வேலியுறை செல்வர். மாடங்களிலும், மாளிகைகளிலும் கட்டியுள்ள
கொடி, சந்திரமண்டலம் வரை உயர்ந்து சந்திரனைமோதி உலாவும்
திருநெல்வேலி உறைசெல்வன் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா
இயல்பினன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து. பேணி - குறிப்பு
வினைமுற்று முற்றெச்சமாயிற்று. “புறங்காடரங்கா நடம் ஆடவல்லாய்” என
(தி.4.ப.1.பா.10.) இத்தொடர் வாகீசர் வாய்மையிலும் வழங்கியுள்ளது.

     5. பொ-ரை: தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த
சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான
சிவபெருமான் பன்றியின் கொம்புடன், அழகிய ஊமத்த மலரையும், இளம்
பாம்பையும், வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், அணிந்த சடை
முடி உடையவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக
உடுத்தவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர்.
பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய
பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர். அரிய வேதங்களை
அருளியவர்.

     கு-ரை: ஏனம் - பன்றி, எழில் திகழ் - அழகு விளங்குகின்ற, மத்தம்
- பொன்னூமத்தை, கூன், நல், வெண்பிறை, ஆவின் - பசுவிற்கிடைப்பதாகிய.
நல் - நல்ல. ஐந்து - பஞ்சகவ்வியத்தை, உகந்து ஆடுவார், அரு மறைகள்
பாடுவார், திருநெல்வேலியுறை செல்வர்தாம், நல் - தூயன ஆகிய,
“ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்” (ப.1.பா.1.) என்புழியும் காண்க.