பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)92. திருநெல்வேலி1117

3796. பைங்கண்வா ளரவணை யவனொடு
       பனிமல ரோனுங்காணா
தங்கணா வருளென வவரவர்
     முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
     வரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                 9


     கு-ரை: மாவிலங்கல் - பெருமையையுடைய, கயிலை மலையை,
அன்று - முந்தி. எடுத்தவன் முடிகளோடு தோள்நெரிய. உந்தி - அமிழ்த்தி.
ஒரு விரலின் நகத்தின் நுனியால் அடர்த்தார். கந்தம் ஆர்தரு - வாசனை
நிறைந்த சோலைகளில் குரங்குகள் பாய்வதால் மலர்களிலுள்ள தேன்துளிகள்
சிந்து பூந்துறையின்கண் மணக்கின்ற திருநெல்வேலி. குறிப்பு: இங்குச்
சிந்துபூந்துறையைக் குறித்ததுபோலவே இப்பதிகம் முதற்பாடலில் பொருந்து
தண் - என்பது கண்ணுதல் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க
தொகையெனக் கொண்டு தண் பொருந்தம் எனத் தாமிரபரணி நதியைக்
குறிப்பித்தனர் எனலும் ஆம்.

     9. பொ-ரை: பசுமையான, வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய
கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும்
திருமாலுடன், குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற்
பொருளான இறைவனைக் காணமுடியாமல், அழகிய கண்களையுடைய
பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில்
வணங்கும் வண்ணம் விளங்கும் சிவபெருமானே, அந்தணர்கள் ஒன்றுகூடி
நால் வேதங்களைப் பாடவும், பெண்கள் நடனமாடவும், மாத விழாக்களும்,
நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும்
அருட்செல்வராவார். அவரை வழிபடுவீர்களாக.

     கு-ரை: பைங்கண்வாள் அரவு - பசிய கண்களையும் ஒளியையும்
உடைய அரவு; அணையான் காணா - (அடியையும் முடியையும்) காணாமல்.
அங்கணா - சிவபெருமானே. அங்கணன் - சிவபெருமானுக்கு ஒருபெயர்.
திங்கள் விழா - நாள் விழா. மல்கு - மாதோற்சவங்களும்,
நித்தியோற்சவங்களும் பொருந்திய திருநெல்வேலி. கூட்டம்