3840. |
நீக்கிய
புனலணி நெல்வெணெய் மேவிய |
|
சாக்கியச்
சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே. 10 |
3841. |
நிலமல்கு
தொல்புகழ் நெல்வெணெ யீசனை |
|
நலமல்கு
ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும்,
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும்,
புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு புத்தமும்,
சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம்
செய்தவர்களின் பண்பாகும்.
கு-ரை:
நீக்கிய - வறுமை, பிணி முதலியவற்றை நீக்கிய, புனல் அணி
- நீர் வளம் உடைய. நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் - சாக்கியரோடு
கூடிய சமண். உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது, பாக்கியம் உடையவர்
பண்பு - தவமும் தவ முடையார்க்காகும், (குறல். 262) சைவமாம் சமயம்
சாரும் ஊழ்பெறல் அரிது (சித்தியார். சுபக்கம் சூ.2.91) என்ற கருத்து.
11.
பொ-ரை: நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான
புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற
ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி
மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.
கு-ரை:
ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் - சொல்வதில்
மகிழ்ச்சி மிக்கவர்: - மகிழ்ச்சிமிக்குச் சொல்வோர். (துயர் இலர் ஆவர்).
|