3856. |
விட்டெழில்
பெறுபுகழ் மிழலையு ளீர்கையில் |
|
இட்டெழில்
பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே. 4 |
3857. |
வேனிகர்
கண்ணியர் மிழலையு ளீர்நல |
|
பானிக
ருருவுடை யீரே
பானிக ருருவுடை யீரும துடனுமை
தான்மிக வுறைவது தவமே. 5 |
4.
பொ-ரை: மிகுந்த அழகும், புகழுமுடைய திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில் ஏந்தப்பட்டதால்
அழகுபெற்ற நெருப்பை உடையவருமான சிவபெருமானே! அழகிய
நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது மேருமலையை வில்லாக
வளைத்தும் (அக்கினியைக் கணையாக எய்தும்) அல்லவா_
கு-ரை:
விட்டு எழில் - அழகு தங்கி, அதனாற் புகழ்பெறுகின்ற
மிழலை. விட்டு - இப்பொருட்டாதலைப் புறப்பொருள் வெண் பாமாலை
வஞ்சிப்படலம் 18 ஆம் பாட்டு உரையான் அறிக. கையில் இட்டு -
இடப்பெற்று. அதனால் அழகுடையதாகியதும் நெருப்பே. அழகனைச்
சேர்ந்தமையால் அழகில் பொருளும் அழகியதாயிற்று. அது நாறுபூம்
பொழில் நாரையூர் நம்பனுக் காறுசூடினும் அம்ம அழகியே என்பதாலும்
உணர்க. கையது கனல், எரித்ததும் கனல் ஆயின், வரைசிலை எற்றுக்கு?
உமது தன்மை அறிவாரார் என்ற குறிப்பு.
5.
பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய
கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற, நல்ல பால் போன்ற
நிறமுடைய சிவபெருமானே! பால் போன்ற நிறமுடைய உம்முடன்
உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும்.
கு-ரை:
வேல் நிகர் கண்ணியர் - வேலை யொத்த கண்களையுடைய
பெண்கள் வாழும் மிழலை. ந(ல்)ல பால் நிகர் - பாலையொத்த. உரு -
நிறம். சதாசிவமூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர்
உருவுடையீர் என்னப்பட்டது.
|