பக்கம் எண் :

1190திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

மையிருஞ் சோலை மணங்கமழ
     இருந்தா ரிடம்போலும்
வைகலு மாமுழ வம்மதிரும்
     வலம்புர நன்னகரே.                    3

3904. ஊனம ராக்கை யுடம்புதன்னை
       உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே
     சிறுகாலை யேத்துமினோ
ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த
     வடிக ளிடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும்
     வலம்புர நன்னகரே.                    4


சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி, விரிந்த சிவந்தசடை தாழ
விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாள்தோறும் நித்திய
பூசையே திருவிழாப் போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும், இருளடர்ந்த
பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும்
நன்னகராகும்.

     கு-ரை: நொய்யது - இலேசான உடம்பை யுடையதாகிய மான்கன்று.
மானின் உடம்பு நொய்ய தென்றும் அதனாலேயே அது ஏனையவற்றிலும்
வேகமாக ஓடக்கூடியதென்றும் வாயு பகவானின் வாகனமாக அதனைக்
கூறுவது அதனாலே யென்றும் கூறுப. நுனை - நுனி. நிலை ஆக்கி -
நிலையாக நிற்கச் செய்து. மெய் எரி மேனி - உடம்பின் தீப்போன்ற
மேனியில் வெண்ணீறுபூசி (மேனி - உடம்பின் தோற்றப் பொலிவு ). தாழ -
தொங்க. மை - இருளடர்ந்த. இரு - பெரிய சோலை (மணம்) கமழ -
(இருந்தார்) காரண காரியப் பொருளின்றி வந்தது. அது "வாவிதொறும்
வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங்
கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே" (தி.1.ப.129.பா.1.)
வைகலும் - நாடோறும் மாமுழவம் அதிரும் என்றது, நித்திய பூசையே
திருவிழாப்போற் சிறப்பிற நடக்கும் என்ற குறிப்பு.

     4. பொ-ரை: தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு
நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே