பக்கம் எண் :

1242திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3974. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
  தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடையா ரூராதி யானைக்காவே.          8

3975. ஆதிமா லயனவர் காண்பரியார்
  வேதங்கள் துதிசெயு மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதியா ரூரெந்தை யானைக்காவே.             9

3976. அறிவி லமண்புத்த ரறிவுகொள்ளேல்
  வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்


     8. பொ-ரை: கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும்
காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின்
தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய
இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும்
ஆதிமூர்த்தி ஆவார்.

     கு-ரை: கடல் வண்ணன் - கடல்போன்று கரிய நிறத்தை உடைய
திருமால். தடவரையரக்கனைத் தலைநெரித்தார் - பெரிய கயிலை மலையின்
கீழ் இராவணனைத் தலையை நெரித்தவர். அடல் விடை ஆரூர் - வலிய
விடையை ஏறிய திருவாரூராம். ஆரூர் என்பது ஆரூரர் என்னும் பொருளில்
வந்துள்ளது.

     9. பொ-ரை: தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும்
மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர்
எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவல் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: ஆதிமால் அயன் அவர் - தொன்றுதொட்டுத் திருமால்
அயன் முதலியோர், காண்பரியார். ஆதி - (நான்காம் அடியில் வரும் ஆதி).
முதன்மையானவர் என்னும் பொருளது.

     10. பொ-ரை: இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய
சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா.
மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி