4003. |
பவளமேனியர்
திகழுநீற்றினர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 3 |
4004. |
பண்ணில்யாழினர்
பயிலுமொந்தையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 4 |
இவரது தன்மை எத்தன்மையது
என்பதை யாவரே அறிவார்?
கு-ரை:
பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன். அது
இராமாயணத்தில் நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை என
வருவதால் அறிக. நட்டம் - திருக்கூத்து.
3.
பொ-ரை: சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர்,
ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப்
பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர்.
இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?
கு-ரை:
பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை உடையவர்.
வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே (தி.4.ப.112. பா.1.);
பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே திருவுடம்பு (தி.9
திருவிசைப்பா.95.); பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறு (தி.4. ப.81.
பா.4.) என்பன காண்க.
4.
பொ-ரை: இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர்.
மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை
எத்தகையது என்பதை யார் அறிவார்?
கு-ரை:
பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை உடையவர்.
ஏழன் உருபு, மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை மயக்கம். மொந்தை
- ஒருவகை வாத்தியம்.
|