|
நீடு
செய்வதுந் தக்கதே
நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
நாக நஞ்சழலை யூருமே. 3 |
4049. |
கட்டு
கின்றகழ னாகமே |
|
காய்ந்ததும்
மதன னாகமே
இட்ட மாவதிசை பாடலே
யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே
குலாயசீர் மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே
நானுய்தற் கிரவு சந்தியே. 4 |
அவரை வணங்கும் என்னைப்
பித்தனாக்கினார். அவரையே நீளத்
தியானித்துப் போற்றுமாறு செய்தார். இது தகுமோ? அவருடைய இடுப்பில்
விளங்குவது அக்குப்பாசியே. அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள
திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார். அவருடைய திருமேனியில்
நாகமும், கண்டத்தில் நஞ்சும், கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன.
கு-ரை:
(பாடுகின்ற) பண்டாரம் - சைவ அடியார். பண்டாரம் -
நிதிநிலை. மத்தம் - பொன்னூமத்தை, (தொழுத என்னை உன் மத்தம் நீடு
செய்வது) தக்கதே - தகுமா? அரை - இடுப்பில். திகழ்ந்தது - விளங்குவது.
அக்கு அதே - அக்குப்பாசியே. திகழ்ந்தது - திகழ்ந்தென மருவி நின்றது.
நாடு சேர் - மிழலை நாட்டைச் சேர்ந்த, மிழலை ஊரும் - உமது ஊராவதும்,
மிழலை வெண்ணிநாட்டிலொன்றுளதாகலின், இங்குக் குறித்தது மிழலை
நாட்டினதென்பார் நாடுசேர் என எங்கள் சம்பந்தப் பெருமான் அருளினார்.
இதனை, மிழலை நாட்டு மிழலை, வெண்ணிநாட்டு மிழலையே என்ற
வன்றொண்டப் பெருந்தகையார் வாக்காலறிக. (தி.7.ப.12.பா.5.) நஞ்ச - நைந்த.
அழல் - விடம். ஐகாரம் சாரியை, நாகம், ஊரும் - உமது உடம்பில் ஊரும்
நாதன் மேனியில் மாசுணம் ஊருமே என மேல் முற்பதிகம் ஆறாம்
பாடலில் வந்ததூஉம் காண்க.
4.
பொ-ரை: சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக
அணிந்துள்ளது நாகத்தையே. அவர் எரித்தது மன்மதனது உடம்பையே.
|