|
பாவி
யாதுரை மெய்யிலே
பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே. 5 |
4051. |
வாய்ந்த
மேனியெரி வண்ணமே |
|
மகிழ்ந்து
பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே
யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே
விரும்பியே யணிவ தென்பதே. 6 |
உம் பொன்போன்ற
திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு
நேருமோ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது. வலியோனாகிய
திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான்.
கு-ரை:
ஓவிலாது - (மகாசங்கார காலம் வரையும்) ஓயாமல், இடும்
(சக்தியைச் செலுத்தி ஐந்தொழிலையும்) நடத்தும். கரணம் - சிறந்த கரண
பூதராய் இருப்பவரே யாது சிறந்த காரணம் அது கரணம் என்பது தருக்க
நூல். கரணம் - (என்னுடைய) மனமுதலிய அகக்கருவிகள். உன்னும் -
உம்மையே நினைக்கும். ஏவு - மன்மதபாணம். சேர்வும் - என்மேல்
தைப்பதும், நின்ஆணையே - உமது ஆணையின்படிதானோ? நின்ன -
உம்முடைய. பொற்றாள் - பொன்போன்ற திருவடிகளை. அருளின் -
அருளினால். நை(தல்)ஏ - துன்புறுதல் எனக்கு நேருமா? நை - நைதல். ஏ
- வினாப் பொருட்டு. இதுவும் தலைவி கூற்று. பாவியது - (உம்மை மனத்துக்)
கருதாது. உரை - உரைப்பன. மெய்இல் - உண்மையில்லாதனவே. இல் -
பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளையுணர்த்திற்று, பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 814) என்றதிற் போல. விறல் -
வலியோனாகிய, கண்ணன் - திருமால். உன்அடி - உமதுதிருவடியை.
மெய்யிலே - உண்மையாகவே. மேவினான் - பொருந்தப் பெற்றான்.
6.
பொ-ரை: சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த
வண்ணமுடையது. அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப்
|