பக்கம் எண் :

1328திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4085. தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
       தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
     திறையவன் பிறையணி சடையன்
நின்றநாள் காலை யிருந்தநாண் மாலை
     கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        7


தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப்
பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.

     கு-ரை: பாதியோர் மாதர் - உடம்பிற் பாதியில் ஒரு
பெண்ணையுடையவர். மாலுமோர் பாகர் பங்கயத்தனுமோர் பாகர் என்றது
ஏகபாத திரிமூர்த்தி வடிவம். புரூரவா: சந்திரகுலத்து அரசன்; பாண்டவர்
முன்னோன். இங்கு அவன் திருப்பணி செய்த வரலாறு கூறுகிறது. இவ்வாறே
கோச் செங்கட்சோழர் திருப்பணி முதலியவற்றைக் கூறுதல் மேற்காண்க.

     7. பொ-ரை: சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை
சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால், அத்தகைய சக்கரப்படையைத்
தனக்கு அருள வேண்டித் தேவலோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு
வந்து சிவனைப் பூசித்தார். சிவபெருமான் சந்திரனை அணிந்த
சடையையுடையவர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும்
மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற
அந்தணர்கள் வாழ்கின்ற, திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும். அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய
திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.

     கு-ரை: ஆலயத்திற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். அது
திருமாலால் கொணர்ந்து தாபிக்கப்பெற்றது எனல் இரண்டாம் அடியில்
குறித்த பொருள்.