பக்கம் எண் :

1336திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4096. முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு
       நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
     பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
     சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற
     வாலவா யாவது மிதுவே.               7


ஏந்திய கையினரும், மூவிலைச் சூலத்தவரும், வேலரும், யானைத் தோலைப்
போர்த்த நீலகண்டரும், கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடையவருமான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.

     கு-ரை: தவம்பணி - தவமாகக் கொண்டு அடியாரைப் பணிகின்ற.
“எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ...
ஈசன் திறமே பேணி” (தி.6.ப.61.பா.3) என்ற திருத்தாண்டகக் கருத்து
இப்பாடலின் முற்பகுதிக்குக்கொள்க.

     7. பொ-ரை: முத்துமாலையும், சந்தனக் குழம்பும், திருநீறும் தம்
மார்பில் விளங்கப் பக்தியோடு பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார்
வழிபடுகின்ற, தூய பளிங்குமலை போன்ற சிவபெருமானும், சுடர்விடு மரகதக்
கொடி போன்ற உமாதேவியும் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திரு ஆலவாய்
இதுவே.

     கு-ரை: முத்தின் தாழ்வடம் பாண்டியர்க்கே சிறப்பாய் உரியது.
பளிங்கின் பெருமலை - சதாசிவ மூர்த்தியின் திருமேனி பளிங்கு போன்றது
என்ப. (சைவர்களைக் கண்டாலும் தீட்டு, அவர்கள் கூறுவதைக் கேட்டாலும்
தீட்டு என்று சமணர்கள் வாழ்ந்த காலத்திலே, சமணநெறி ஒழுகிய தம்
கணவரான பாண்டிய மன்னர் மனம் புண்படாதிருக்க மங்கையர்க்கரசியார்
திருநீற்றினைத் தம் மார்பில் பூசிக்கொண்டார். இது அம்மையாரின் மாண்பை
உணர்த்தும்.)