4094. |
செய்யதா
மரைமே லன்னமே அனைய |
|
சேயிழை
திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி
நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான்
விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற
வாலவா யாவது மிதுவே. 5 |
4095. |
நலமில
ராக நலமதுண் டாக |
|
நாடவர்
நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. 6 |
5.
பொ-ரை: சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் இலக்குமி
போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவரும்,
அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற அல்குலையும்
உடையவருமான பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் நாள்தோறும்
மனமகிழ்வோடு வழிபாடு செய்து போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம்,
மான், மழு ஆகியவற்றைத் தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு
இன்புற்று வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.
கு-ரை:
செய்யதாமரைமேல் அன்னம் - இலக்குமி. (முதற் பாட்டில்
பங்கயச் செல்வி என்பதுவும் காண்க.)
6.
பொ-ரை: நல்ல குணங்களை உடையவராயினும், அவை
இல்லாதவராயினும், எந்த நாட்டவராயினும், நாடறிந்த உயர்குடியிற்
பிறந்தவராயினும், பிறவாதாராயினும் அடியவர்களைக் காணும்போது
அவர்களை வணங்கி வழிபடுதலையே தவமாகக் கொண்டவர் குலச்சிறையார்.
அத்தகைய குலச்சிறையார் வழிபடுகின்ற, மான்
|