|
கிரியுந்
தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 5 |
4153. |
கிள்ளை மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத்
|
|
தள்ளித்
தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 6 |
4154. |
பாதத் தொலிபா ரிடம்பாட நடஞ்செய்
|
|
நாதத்
தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. 7
|
4155. |
எண்ணா
தஅரக் கனுரத் தைநெரித்துப் |
|
பண்ணார்
தருபா டலுகந் தவர்பற்றாங்
கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 8
|
கொடிகள் வானவரை அழைப்பது
போலசையும் திருவிடைவாய் என்பர்.
6.
பொ-ரை: சிவபெருமானை விலக்கி, பார்வதிதேவியை இகழ்ந்த,
தக்கனது தலையைக் கொய்து, பின் அருள் செய்த பெருமானது இடம்,
வள்ளிக் கொடி போன்ற இடையையும், நெருங்கிய தனபாரங்களையும்,
சிவந்த வாயையும், வெள்ளிய பற்களையும் உடைய, மகளிர் நடஞ்செய்யும்,
திருவிடைவாய் என்பர்.
7.
பொ-ரை: திருவடிப்புகழைப் பூதகணங்கள் பாட, தான் நடனம்
செய்யும் ஒளிவடிவாய நாத தத்துவத்தினிடமாகத் திகழும் சிவபெருமானது
இடம், இசைப்பாடல்களின் ஒலியும், முழவொலியும் வேதஒலியும் நிறைந்த,
திருவிடைவாய் என்பர்.
8.
பொ-ரை: தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து,
பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல் கேட்டு உகந்த
சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும் திருவிழாக் காலங்களில்
விண்ணவர்களும் வந்திறைஞ்சும் சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
|