|
செய்யெ
லாங்கழு நீர்கம லம்மலர்த் |
|
தேற
லூறலிற் சேறுல ராதநற்
பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே. 3 |
2815. |
முள்ளி
நாண்முகை மொட்டியல் கோங்கின் |
|
அரும்பு
தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை |
விரும்பி எழுந்தருளியுள்ள
இடம், செங்கழுநீர்ப் பூக்கள், தாமரைப் பூக்கள்
இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத
வயல்களையும், பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய
திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
பைஅராவரும், வஞ்சிகொள் நுண்ணிடை-என்னும்
தொடர்களிலுள்ள பைஅரா-படத்தையுடைய பாம்பு, வரும் கொள்-என்ற
சொற்கள் உவம வாசகம், பஞ்சின் ஏர்அடி-பஞ்சைப்போன்ற மெத்தென்ற
அழகிய அடி, இன் என்ற உருபு உவமப்பொருளில் வந்ததனால், பஞ்சின்
நேர்அடி எனப் பிரிக்கலாகாமை யறிக, இன்தவிர் வழிவந்த சாரியையெனக்
கொள்ளின் பஞ்சு(இன்) நேரடி எனப்பிரித்துப் பஞ்சையொத்த அடியெனக்
கொள்ளலாம். கழுநீர்-செங்கழுநீர், தேறல்-தேன், மலர்த்தேன் ஊறிப்
பாய்ந்து கொண்டேயிருப்பதால் வயலிற் சேறுலராத நல்ல வளம்பொருந்திய
பூந்தராய் என்றும் பொய்யிலா மறையோர்பயில் பூந்தராய் என்றும் இயைக்க.
4.
பொ-ரை: தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும் தேனை
உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய
பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திருமுலைகளையுடைய உமாதேவியாரை,
திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலைபோல் விளங்கும் தன்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி
எழுந்தருளியுள்ள இடம், பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள்
நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய்.
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
முள்ளி-தாமரை, தாமரைத்தண்டிலுள்ள கேசரங்கள்
முள்ளைப்போலக் காணப்படுவதால் முள்ளியெனப்பட்டது. (முளரி-தாமரை)
காரணப்பெயர். (காரண இடுகுறிப்பெயரென்க). முகை-காயரும்பு.
மொட்டு-முற்றிய அரும்பு. மொட்டு இயல் கோங்கு-
|