பக்கம் எண் :

406திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்
       மேவி னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே. 4

2816. பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர்
       கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு
     நீல மல்கிய காமரு வாவிநற்
புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே. 5


மொட்டாகப் பொருந்திய கோங்கு. கோங்கமொட்டு. அரும்பு தேன்கொள்
குரும்பை-ஊறும் தேனைக்கொண்ட குரும்பை இல் பொருளுவமை.
அரும்புதல்-இங்கு ஊறுதல் என்னும் பொருட்டு. இச்சொல் “கவர்வரும்ப”
எனப் பிறபொருளில் வருதலும் காண்க. மூவாமருந்து-மூவாமைக்குக்
காரணமான மருந்து. எதிர்மறைப் பெயரெச்சம்-ஏதுப்பொருள் கொண்டது.
வீமருபொழில்-மலர்கள் பொருந்திய சோலைகளில். புள்ளினம் துயில்
மல்கிய-பறவைக் கூட்டங்கள் துயிலுதல் மிகுந்த (பூந்தராய்). தங்களுக்கு
வேண்டிய உணவு முதலிய வகைகளெல்லாம் எளிதிற் கிடைத்தலால்
கவலையின்றித் துயிலுகின்றன. இதனால் தலத்தின் சிறப்புக் கூறியவாறு.
தாமரையரும்பு, கோங்குமொட்டு, தேனூறுகுரும்பை, அமிர்தம்உள் இயன்ற
செம்பொற் கலசம்போன்ற தனபாரம் என்பது பல்பொருள் உவமை
(தண்டியலங்காரம் 32-16).

     5. பொ-ரை: பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழியாளாய்,
நிறைந்த கூந்தலையும், பசுந்தளிர் போன்ற மேனியையுமுடைய
உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான்
விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம், வளையல்களை அணிந்த பெண்களின்
கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய
குளங்களையுடையதும், பசு புண்ணியங்கள், பதி புண்ணியங்களைச்
செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை
நாம் வணங்குவோமாக!

     கு-ரை: பண்ணியன்று எழும்-பண்ணின் இசையொடு பொருந்தி
வெளிப்படும், மென்மொழியாள்-மெல்லிய மொழியை உடையவள். பெண்டிர்
மென்மொழியர் என்பதனை ‘மென்மொழிமே வல ரின்னரம் புளர’ என்னும்
திருமுருகாற்றுப்படையாலும் அறிக.