|
தீசன்
மேவும் இருங்கயி லையெடுத் |
|
தானை
அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 8 |
2820.
|
கொங்கு
சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக் |
|
கொவ்வை
வாய்க்கொடி யேரிடை யாள்உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனு மாமல ரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே. 9 |
உடைய ஒளி பொருந்திய
மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவபெருமான்
எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த
இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும்
வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த
திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
காசை-காயாம்பூ; நீலநிறமுடைமையால் இது குழலுக்கு உவமை
கூறப்பட்டது. கயல்ஏர்தடங்கண்ணி-மீனைப்போன்ற அழகிய அகன்ற
கண்களையுடையவள். காம்பு அ(ன்)னதோள் கதிர்மென்முலை-மூங்கில்
போன்ற தோளையும் கதிர்வீசும் மெல்லிய தனங்களின் ஒளியையுமுடைய.
மலைமாது-இமைய அரையன் புதல்வியாகிய அம்பிகை. மார்பு
அகலம்-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. அமரும்-தங்கும். மார்பு
அகலத்து ஈசன் மேவும். இரும்-பெரிய.
9. பொ-ரை:
மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி பொருந்திய
வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கொடி
போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு
பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய், கார்மேக
வண்ணனான திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்
அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற
சிவபெருமான் எழுந்தருளும் இடம், வானம்வரை பொங்கிய ஊழி
வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய்.
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
கொங்கு-வாசனை. நிழல்-ஒளி. கொவ்வைவாய்-
|