பக்கம் எண் :

436திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

     பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
       ஏந்து மான்மறி யெம்இ றையே. 10

2855. புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
  அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
     பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
     பந்த மார்வினை பாறி டுமே. 11

திருச்சிற்றம்பலம்

வீற்றிருக்கும் கடவுள், திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு
தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான்.

     கு-ரை: பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய்கடிந்து - அளவை
நூலுக்குப் பொருத்தமில்லாத சமணநூலும் சாக்கியநூலும் சொல்லும்பொருளை
நீக்கி. இமையோர் தொழ இருத்தல் செய்த பிரான் - இமையோர் தொழ
இருந்தபிரான். கைமான்மறி ஏந்தும் எம் இறை - அவனே கையில்
மான்மறியேந்தும் எம் இறை. கைஏந்தும் மான் மறி எந்தை - இலாத வெண்
கோவணத்தான் என்பதுபோல நின்றது.

     11. பொ-ரை: உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, என்றும் அழிதலில்லாத
எம் தலைவனான சிவபெருமானைத் திருஞானசம்பந்தன் அருளிச் செய்த
இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப்
பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும்.

     கு-ரை: எம் அடிகளை ஞானசம்பந்தன் மாலைகொண்டேத்தி
வாழுங்கள். அதனால் ஒளிபுக்க இடத்தில் இருள் தானாக நீங்குதல் போல
நம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் மாறிவிடும். அந்தம்இல் அடிகள் -
முடிவில்லாத எம்கடவுள்.