|
செல்ல
வுந்துக சிந்தை யார்தொழ |
|
நல்கு மாறருள் நம்பனே. 6 |
2862. |
ஆறு வந்தணை
யுங்கொள்ளம் பூதூர் |
|
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 7 |
2863. |
குரக்கி
னம்பயி லுங்கொள்ளம் பூதூர் |
|
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 8 |
தலத்தினை அடையும்படி
ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப்படுவதாக.
நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
கு-ரை:
பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம்
பூதூரையடைந்து விட்டதாதலால் ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர்
என்று அருளினார்.
7.
பொ-ரை: ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம்
தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக.
நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
கு-ரை:
ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று பாடப்பட்டது.
இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையானபோது பதிகம் முற்றுப்
பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்பட்டமையையும் அறிக. (பெரியபுராணம்.)
8.
பொ-ரை: குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால்
உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்
கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான
|