2864. |
பருவ
ரால்உக ளுங்கொள்ளம் பூதூர் |
|
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 9 |
2865. |
நீர
கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த் |
|
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 10 |
ஆதிமுதல்வனான சிவபெருமானைத்
தியானிக்க இந்த ஓடம் தானாகவே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:குரக்கினம்
- குரங்குக்கூட்டம். சிலப்பதிகாரம் போன்ற தொடர்.
நிலைமொழி மெல்லெழுத்து வல்லெழுத்தாயிற்று. செற்ற - கோபித்த.
ஆதிமுதல்வன்.
9.
பொ-ரை: பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்
பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம்
தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து
மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:
பருவரால் - பருத்த வரால் மீன்கள். உகளும் - துள்ளும்.
10,
பொ-ரை: நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்
பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர்களும் பகைத்துப்
பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:
நீர் அகம் - நீரைத்தன்னிடத்தே உடைய. நீரகக்கழனி
என்றதால் கொள்ளம் பூதூரின் நீர் வளம், நில வளம் இரண்டையும்
|