பக்கம் எண் :

444திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2866. கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
  நன்று காழியுள் ஞானசம் பந்தன்
     இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
     என்றும் வானவ ரோடிருப் பாரே. 11

திருச்சிற்றம்பலம்

புலப்படுத்தினார். தேர் அமண் - தேரரும் அமணரும், தேரர் - சாக்கியர்,
அமணர் - சமணர் உம்மைத்தொகை.

     11. பொ-ரை: கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய
சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புகழுடைய
காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால்
இறைவனைப் போற்ற வல்லவர்கள்எப்பொழுதும் தேவர்களோடு கூடி
மகிழ்வர்.

     கு-ரை: நன்று காழி - புண்ணியம் பொருந்திய காழி. ஞான சம்பந்தன்
இன்று சொன்ன பாடல்களைக் கொண்டு, இன்னும் பிற்பட்ட பல்லாயிர
ஆண்டுகளிற் கூறுவாரேனும், என்றென்றைக்கும் தமக்கு வந்த
ஆபத்தினின்றும் நீங்கி வானவரோடு இருப்பார்.

        திருஞானசம்பந்தர் புராணம்
 
தேவர் பிரான் அமர்ந்திருக் கொள்ளம் பூதூர்
     எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி
     ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
     கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மேல் நின்று
     நம்பர்தமைக் கொட்டம்என நவின்று பாட.
                                 -சேக்கிழார்.