பதிக
வரலாறு:
இராமன்
இலங்கை செற்ற மிக்க பெரும்பாதகத்தை நீக்கவேண்டி,
திருவிராமேச்சுரத்தைச் சேர்ந்து, செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணி,
மங்கையர்க்கு நாயகியாரும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ மணிநீர்
வாயில்புக்கு வலங் கொண்டு போற்றிப்பாடியது இத் திருப்பதிகம்.
பண்: காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்: 268 |
|
பதிக
எண்: 10 |
திருச்சிற்றம்பலம்
2900. |
அலைவளர்
தண்மதி யோடய லேஅடக் கிஉமை |
|
முலைவளர்
பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 1 |
1. பொ-ரை:கங்கையையும்,
குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே
அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய
சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச்
சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல
மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.
கு-ரை:அலை-கங்கையை.
குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே
அடக்கி-தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன். கிளை-கொம்பு, மிளார்
முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல தாழை மரங்களுக்கின்மையால் இது
வளர்தாழை யெனப்பட்டது. தழைகளையுடையது-தாழை-நீளல். முதல்உயிர்
நீண்டசொல். விம்மு-தழைத்த. கானல்-கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய
மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான்
இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை-சினையாகு பெயர்.
ஆட்சிசெய்யுமிடத்தை ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.
|