பக்கம் எண் :

488திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
     கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கி்ல்லை
     அல்லலே.                           6

2927. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர்
       வண்ணனும்
வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு
     பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக்
     கோட்டாற்றுள்
அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ
     கனன்றே.                            7


பாகமாகக் கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள
விகிர்தன். மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருள்கின்ற, அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய
அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை.

     கு-ரை: “பந்து அமரும் விரல்”. அமரும் - என்ற சொல் போலும்
என்ற பொருள்தரலால் உவமவாசகம். மாதர் கைவிரல் நுனியின் திரட்சிக்குப்
பந்து உவமை. வெந்து அமரும் - வெந்து தணிந்த. பொடி - திருநீறு. பொடி
பூசவல்ல விகிர்தன் - மேலானவன்.

     7. பொ-ரை: துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில்
சூடியவன் சிவபெருமான். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த
நிறமுடையவன். பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற
கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக்
கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த
நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி நின்ற
அழகன் அல்லனோ?

     கு-ரை: வண்டு அமரும் குழல் - பூவில் உள்ள தேனை விரும்பி
வண்டுகள் தங்கும் கூந்தல். அண்டமும் எண்திசையும் ஆகித்