பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)12. திருக்கோட்டாறு489

2928. இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங்
       கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி
     செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
     கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள்
     செய்யுமே.                         8

2929. ஓங்கிய நாரண னான்முக னும்உண
       ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம
     லன்னிழற்


திருக்கோட்டாற்றுள் எழுந்தருளியுள்ள அழகனே சுடர் வண்ணனும்
மங்கையாளோர் பங்கனும் ஆவான். சுடர் - தீ. “சோதியே சுடரே”
என்ற திருவாசகம் காண்க.

     8. பொ-ரை: இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான
இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன்
வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள்
சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில்
பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.

     கு-ரை: ‘கரவு அமரக் கயிலை எடுத்தான்’ - திக்கு விசயம் பண்ண
வந்த இராவணன், விமானத்தோடு கயிலையைக் கடக்க வேண்டியபொழுது,
தன் ஆற்றல் கருதாது பொருதற்குந் தூது அனுப்பிப் போர்புரிந்து வென்று
கடக்க வேண்டும்; அன்றேல், தன் எளிமை கருதி அஞ்சி விரும்பி வரம்
பெற்றுச் செல்ல வேண்டும்; இவ்விரண்டுமல்லாதது வஞ்சச் செயலாதலால்
கரவு அமரக் கயிலை எடுத்தான் எனப்பட்டான். குரவு - ஒருவகை மரம்;
அதன் பூ சிவபூசைக்குரியது.

     9. பொ-ரை: செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா வண்ணம்
அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான்