பக்கம் எண் :

492திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 13. திருப்பூந்தராய்

பதிக வரலாறு:

     5 ஆம் பதிகம் பார்க்க.

         பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:271   பதிக எண்: 7

2932. மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
  துன்னிய புரமுகச் சுளித்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.         1

2933. மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
  வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.         2

                   திருச்சிற்றம்பலம்


     1. பொ-ரை: மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின்
நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான
சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய
பூந்தராய் நகரில், அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப்
பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: மின் அன்ன எயிறுஉடை விரவலோர்கள் தம் - மின்னலைப்
போன்ற பற்களையுடைய பகைவர்களாகிய அசுரர்களின் துன்னியபுரம்.
உகச்சுளிந்த தொன்மையர் - நெருங்கியபுரம் (மூன்றும்) அழியும்படி,
கோபித்தருளிய பழமையானவர். புன்னையம்பொழில்-புன்னை
மரச்சோலைகளின் அழகுடைய பூந்தராய் நகரில் எழுந்தருளியிருப்பவர்
-அரிவை பங்கரே, புரம் உகச் சுளிந்த தொன்மையரே, திருப்பூந்தராய்
எழுந்தருளிய கடவுள் ஆவர். விரவலோர்-ஆர்விகுதி ஓர் என ஆயிற்று.
சுளிதல்-கோபித்தல்.

     2. பொ-ரை: பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத்திலிருந்த
அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால்