பக்கம் எண் :

54மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     வெறியமான் கரத்தார் - 109-1

     வெறிய-குறிப்புப்பெயரெச்சம்

     செற்றினில் மலிபுனல் - 97-5

     செற்றி-பாத்தி. செறு+இ-இகரம் வினைமுதல் பொருள் விகுதி.

     இத்தகைய இலக்கணக்குறிப்புகள் பிற்காலத்து இலக்கண நூல்களிலும்
உரைகளிலும் இவருக்கு உள்ள புலமையைப் புலப்படுப்பனவாம்.

ஈ.நன்னூல்

     நாம் மனனினில் வர நினைதல் நன்மையே - 21-9

     மனம்-மனன்-போலி.

     ஈறுபோதல் விதி - 61-11

     சிலவிகாரமாம் உயர்திணை - 76-7

     மெய்விட்டு ஓடும் -84-3

     அருமை+அணங்கு-ஆரணங்கு - 103-7

     இன்னோரன்ன குறிப்புக்களால் இவருக்கு நன்னூலிடத்து உள்ள
ஈடுபாடு புலப்படும். தொல்காப்பியத்தில் ஈடுபட்டவர்கள் பண்புத்
தொகைகளை நிலைமொழி வருமொழி எனப்பிரித்துப் புணர்ப்பதனை ஏலார்.
ஆனால் இவர்-

     ஆரிடம்-அரும்+இடம் - 4-7

     ஆரழகன்-அரும்+அழகன் - 61-1

     இளங்கொன்றை-இளம்+கொன்றை - 8-10

     சுடுநெருப்பு-சுடும்+நெருப்பு - 46-1