தொழும்-ஏவற்பன்மை.
நெறிபடு
குழலியைத் தலைமிசைச் சுலவி -92-3
சுலவி-கலந்தணிந்து.இ-வினையெச்சவிகுதி.
பொன்னம்மல்கு
தாமரைப்போது -53-8
பொன்னம்-இலக்குமி.
தனிமொழியும் சாரியை பெற்றது.
மருமானார்
இவர் என்று மடவாளொடு உடனாவர் -64-2
என்று-என்ன
என்பதன் வினையெச்சத்திரிபு.
தாட்சியால்
அறியாது தளர்ந்தனர் -44-9
தாட்சி-தாழ்ச்சி
என்பதன் மரூஉ. வீரசோழிய விதிப்படியும் ஆம்.
சடைக்கங்கையான்,
இடம் மேவிய மங்கையான் -48-1
கங்கையைச்
சடையில் தாங்கியவன், மங்கையை இடம்
மேவியவன்-வடமொழி விதி.
அந்தண்
காழிப் பந்தன் சொல்லை -40-11
பந்தன்-ஒருபுடைப்பெயர்
கொளல்-வடமொழிவிதிபற்றி.
உண்பின
உலகில் - 14-11
உண்பின-குறிப்புப்பெயரெச்சம்
மைய
கண் மலைமகள் - 19-2
மைய-குறிப்புப்பெயரெச்சம்.
சம்பந்தன
செந்தமிழ் - 24-11
சம்பந்தன-அகரம்
ஆறன் உருபு.
பந்தணை
மெல் விரலாளொடும் பயில்விடம் - 28-3
பயில்விடம்-வகரம்
உடம்படுமெய் அல்லாமெய்
|