3040. |
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் |
|
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே. 10 |
பிதற்றுதல் என்று
மாமே என்பது சூடா மணி நிகண்டு. ஆர்வணம் -
ஆர்தல்; திளைத்தல். பித்தர் - இங்குப் பேரன்பினர் என்னும் பொருளில்
வந்தது. நின்கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் திருவாசகம்.
அம்பலவர்க்குற்ற பத்தியர்போல ... ஓர் பித்தி தன்பின்வர முன்வருமோஓர்
பெருந்தகையே (திருக்கோவையார் - 242) என வருவனவற்றால் அறிக.
பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய
பதிகங்கள் குறிக்க, இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று மட்டும்
குறிக்கிறது. அதன் கருத்து, திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும்
காணமுடியாது என்பதாம்.
அநுபலப்தியால்
பெறவைப்பான் கார்வணன் நான்முகன்
காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி யென்று; அடியே காணாதார்
முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக.
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற்
கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன
திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன்
போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து
அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
சமணர்களாகிய கழுவையேந்திய கையையுடையவர். வித்தகம்
நீறு - திறமையைத் தரும் விபூதி. அத்திரம் - அம்பு. நீறணிவார் -
சிவனடியார். வினை - போர். வினைநவின்ற யானை என்பது புறநானூறு.
சிவனடியார் மேற் போர்புரியப் பகைவர் எவர்வரினும் அவரை எதிர்த்து
அம்பு போற்பாய்ந்து அழிக்க வல்லது திரு ஐந்தெழுத்துமே. போதி
மங்கையில் கூட்டத்தோடு புகலியர் கோனை எதிர்த்த புத்த நந்தி தலையில்
இடிவிழச் செய்தது இப்பாசுரமே. வினையாகிய பகைக்கு ஐந்தெழுத்து ஆகிய
அத்திரம் என்றது உருவகம்.
|