பக்கம் எண் :

564திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3055. அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
  நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.       4

3056. அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
  விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.    5


இலாதார்க்கு உறுதுணையாயும் உள்ள ஒரு பெருந்தகை" ஓர் பெண்
துணையாக வீற்றிருக்கிறார் என்பது ஒரு நயம்.

     4.பொ-ரை: நெஞ்சமே! வினையால் இத்துன்பம் வந்தது என்று
எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக. (இறைவனை
வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு). ஒளிமிக்க
வளையல்கள் முன்கைகளில் விளங்க, சிறந்த ஆபரணங்களை அணிந்த
உமாதேவியோடு, கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு
நீர்வளமும், நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல
பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: அடைவு - பற்றுக்கோடு. சேருமிடம் - புகலிடம். அயர்வு -
தளர்ச்சி. கடை உயர் மாடம் ஆர் - கடைவாயில்கள் உயர்ந்த
மாளிகைகளையுடைய. (கழுமலவளநகர்). இனி, கடைஉயர் (மாடம் ஆர்)
கழுமலம் என்றுகொண்டு, ஊழிக்காலத்தில் உயர்கின்ற கழுமல