3102. |
விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே |
|
எண்ணிலார்
முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே. 7 |
3103. |
கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன |
|
சிரத்தினை
ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.
8 |
7.
பொ-ரை: சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள்
மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத
அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர்.
நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த
எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி
என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
விண் - தேவ உலகம். எண் இலார் - (வழிபட்டு உய்யும் )
எண்ணம் இல்லாதார்.
8.
பொ-ரை: தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய
அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத்
துன்புறும்படி தம்காற்பேருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர். பின்
இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி
கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச்
சாமகானம் பாட, அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
அரக்கன சிரம் - அரக்கனுடைய தலைகள். வருமொழி
பன்மையாதலினால் ஆறனுருபில் அகரம் வந்தது. அதனால் சிரம் என்பதைப்
பால் பகா அஃறிணைப் பெயராகக் கொள்க. இரத்து - இரத்தல். கெஞ்சி
வேண்டல், து - தொழிற்பெயர் விகுதி, பாய்த்து என்பதிற்போல.
வரத்தினான்-வரத்தைத் தந்தவன். பாடலும், அவனுக்கு அரளிய
வரத்தையுடையவன் (வரன் அருளியவன்) என்பது.
|