பக்கம் எண் :

600திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.           8

3115. செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
  தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே.  9

3116. போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
  வாதினால் உரையவை மெய்யல வைகலும்


யினால் இராவணனின் வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும்
முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க
நல்தவப்பேறு உண்டாகும்.

     கு-ரை: இப்பாடலுள், தன் என்பன நான்கும் அசைகள், சீரின்
ஆர்மலை, சிறப்பின் மிகுந்த மலை; கயிலை. உலகமெல்லாம் அழியும்
ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி வளரும் தன்மை
உடையது. கலைதன் ஆர்புறவு-மானினத்தின் நிலமாகப் பொருந்திய முல்லை
நிலம். அந்நிலக் கருப்பொருள்களில் ஒன்று மான்.

     9. பொ-ரை: சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரை மலரில்
வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர்
சிவபொருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய
கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.

     கு-ரை: கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது, ஆதலால் கையால்
தொழுது எனல் வேண்டா கூறலன்று “கரம் தரும் பயன் இது என
உணர்ந்து” என்பது பெரியபுராணம்.

     10. பொ-ரை: அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த
புத்தர்களும், அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும்
சமணர்களும், தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை