3197. |
கன்றொருக்கையி லேந்திநல்விள |
|
வின்கனிபட
நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொரு
டேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி
யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே. 8 |
3198. |
உண்டுடுக்கைவிட் டார்களும்முயர் |
|
கஞ்சிமண்டைகொள்
தேரரும்
பண்டடக்கு சொற்பேசும்அப்பரி
வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழன்
மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர
மாபுரத்துறை கூத்தனே. 9 |
8.
பொ-ரை: ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின்
கனியை அழித்த திருமாலும், தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை
நன்கு கற்ற பிரமனும், அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக்
கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும்,
திருமுடியையும் தேடியும் காணாதவராயினர். அப்பெருமான் அருள்
தன்மையும், ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய
திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
ஒருகை, ஒருக்கை என இசை நோக்கி ஒற்றுமிகுந்தது. நூறி -
அழித்தவன்; பெயர்ச்சொல். ஒருக்கிய - ஒருங்கு சேர்ந்த, தொகுத்த,
(மாமறை) பின்தருக்கிய. இந்தப் பதிகத்தில் அரக்கனையும் அடி, முடி தேடிய
இருவரையும் ஒரு பாசுரத்தில் கூறியதுணர்க.
9.
பொ-ரை: உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும்,
மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும்
மக்களிடம் பரிவில்லாதவர்கள். உயர்ந்தவையும் தொன்றுதொட்டு
வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர். அவர்கள்
சொற்களைக் கொள்ள வேண்டா. வீணை,
|