பக்கம் எண் :

662திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3215. கூட்டினார்கி ளியின்விருத்த
       முரைத்ததோரொலி யின்றொழிற்
பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு
     மெக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர்
     கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.                 5


கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன்
பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவமே சீரிய சமயநெறி
என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு
யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்.

     கு-ரை: மந்தி - பெண் குரங்கு. ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்
யாதெனின், சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவநெறியே சீரிய
நெறியெனவும் ஆற்றல் அறியாததால் அகக் கண் இழந்தவர். அந்தகர் -
குருடர். நெறி தெரியாது தியங்குதல் அவ்வழிச்சென்று இடர்ப்படல்
உடைமை, குருடர் செயல்.

     5. பொ-ரை: கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப,
கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி
ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி
அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத
குறும்பர்கட்கும் யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்றும் நின்று
அருள்புரிவார்.

     கு-ரை: கிளிவிருத்தம், எலி விருத்தம் முதலிய சுவடிகளை. மெய்
சொலி - மெய்யென்று சொல்லி. பக்கம் - ஓரமான வழியே செல்லுகின்ற
எக்கர் பல அறம் காட்டி வரும் மாடு எலாம் கவர்கையர் - பல
தருமங்களும் செய்தவர்களாக வெளிக்குக்காட்டி அதனால் வரும்நிரைப்
பொருள்களை எல்லாம் கவர்கின்றவர். கசிவு - மன இரக்கம். ஒன்று இலா
சிறிதும் இல்லாத. சேட்டை - மூதேவி, குறும்பு . எக்கர் தங்களை. கையரை
என்பதில் உள்ள இரண்டனுருபுகள் நான்கன் பொருளில் வந்ததனால்
வேற்றுமை மயக்கம்.