பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)39. திருஆலவாய்665

  வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
     யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.               9

3220. தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
       தரிப்பொணாதநற் சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக்
     கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
     வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.               10


வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக்
களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி,
பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன்
அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால்.

     கு-ரை: பூமகன் - பிரமன், ஒய்வு அரு - நினைத்தற்கும் அரிய. சாம்
அவத்தையினார் - இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்யும் நிலையுதயடையோர்.
அவத்தை - நிலைமை. வேம் - வருந்துகின்ற. பிறவினை விகுதி குன்றி
நின்றது. மெய் - உடம்பில், பொடி அட்டி - நீராடாமையால் புழுதி படிந்து
வாய் சகதிக்கு நிகர் ஆவார்.

     10. பொ-ரை: சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல
சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை
வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும்
நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான்
திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன்.

     கு-ரை:ஏத்து ஒழிந்து - ஏத்துலை நீங்கி, ஏத்தாமல், இடுக்கு
மடுத்துத் துன்புறுத்தலையே பொருந்தி. வாய்த்தவம்..... பழிக்கும் - நூல்
வழியில்லாமலே ஒரு பொய்த்தவம் நாட்டி அறிஞரைப் பழிக்கின்ற. புலம்
- அறிவு. புலவோர் - அறிஞர், அங்கதர்.