3230. |
பூவினானும், தாவினானும் |
|
நாவினாலும்,
நோவினாரே. 9 |
3231. |
மொட்டமணர், கட்டர்தேரர் |
|
பிட்டர்சொல்லை,
விட்டுளோமே 10 |
3232. |
அந்தண்காழிப், பந்தன்சொல்லைச் |
|
சிந்தைசெய்வோர்,
உய்த்துளோரே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
தூர்த்தன்-இராவணன். ஆத்தம் - நண்பன். பண்பாகு பெயர்.
"ஆத்தமென்றெனை ஆளவல்லானை" - ஆளுடைய நம்பிகள் வாக்கு.
9.
பொ-ரை: தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும்
உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின் திருமுடியையும்,
திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால்
அவனைப் போற்றி உருகிநின்றனர்.
கு-ரை:
தாவினான் - உலகம் அளந்தவன்.- 'திருமால் அடியளந்தான்
தாஅயதெல்லாம்' என்ற திருக்குறளில் இப்பொருள் காண்க.
10.
பொ-ரை: தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன்
விளங்கும் சமணர்களும், கட்டான உடலமைப்புடைய புத்தர்களும், சைவசமய
நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது
விட்டோம்.
கு-ரை:
மொட்டு - பூ. அரும்பு - அதுபோன்ற தலையுடைமையின்
மொட்டமணர் என்றார். கட்டர்-துன்புறுத்துவோர்.
11.
பொ-ரை: அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து
பாடுபடுவர்கள் உய்தி பெற்றவர்களாவர்.
கு-ரை:
அந்தண்காழி - அழகிய குளிர்ந்த காழி. பந்தன் -
ஞானசம்பந்தன் ஒருபுடைப்பெயர் கொளல் எனும் வடமொழியிலக்கணம்
பற்றி.
|