3239. |
கரியின்னுரியன், திருவேகம்பன் |
|
பெரியபுரமூன்,
றெரிசெய்தானே. 7 |
3240. |
இலங்கையரசைத், துலங்கவூன்றும் |
|
நலங்கொள்கம்பன்,
இலங்குசரணே. 8 |
3241. |
மறையோனரியும், அறியாவனலன் |
|
நெறியேகம்பம்,
குறியாற்றொழுமே. 9 |
3242. |
பறியாத்தேரர், நெறியில்கச்சிச் |
|
செறிகொள்கம்பம்,
குறுகுவோமே. 10 |
கு-ரை:
நிலவு-விளங்குகின்ற. குலம் ஆக. குலவா - குலவி.
7.
பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட
இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத் துன்புறுத்திய
அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார்.
கு-ரை:
பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம்.
8.
பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின்
கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன் நலத்தை அழித்த
திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய
வழியாகும்.
கு-ரை:
துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும் விளங்க.
கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர்.
9.
பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு
மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும்,
போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார்.
கு-ரை:
(அறியா) அனலன் - நெருப்பாகி நின்றவன்.
10.
பொ-ரை: தலைமயிர் பறியாத புத்தர்களும், அது பறிக்கப்பட்ட
சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில் ஞானம்
|