பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)47. திருஆலவாய்709

  பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.          8

3306. மாலும் நான்முக னும்மறி யாநெறி
  ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு யுள்ளமே.           9

3307. கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
  அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.     10


திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை
உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான
சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள்
திருவுள்ளம் யாது?

     கு-ரை: கிரியேற்றவனாகிய அரக்கன் என்க. முடிச்செருக்கு -
பத்துத்தலை உடையேன் என்னுஞ் செருக்கு. பரக்கும் - எல்லா உலகினும்
பரவிய. மாண்பு - பெருமை. பாவரை - பாவியரை; வாது செய்யுமிடம்.
கரக்க - ஒளிக்க. ஒழியும் வண்ணம், இது இடைப் பிறவரல்.

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே!
இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய
வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது
செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?

     கு-ரை: சால - முற்றிலும். வாது செயத் திருவுள்ளமே பணிப்பீராயின்
என்பது கருத்து.

     10. பொ-ரை: நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும்
புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும் சமணர்களையும் அடக்க
எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது
திருவுள்ளம் யாது?