3321. |
நம்பு வாரவர் நாவி னவிற்றினால் |
|
வம்பு
நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே. 2 |
3322. |
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் |
|
தக்கு
மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே. 3 |
2.
பொ-ரை: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக
நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால்,
நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது,
எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய
சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே
ஆகும்.
கு-ரை:
நம்புவார் - விரும்புவார். நம்பும் மேவும் நசை யாகும்மே
என்பது தொல்காப்பியம் (சொல். உரி) வம்புநாண் மலர்வார் மது
-வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன். இம் மந்திரம் எல்லா
உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது. நம்பன் சிவ பெருமானுக்கு
ஒரு பெயர். நம்பனே எங்கள் கோவே என்ற அப்பர் வாக்கால் அறிக.
3.
பொ-ரை: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ
பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக்
கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத்
தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத
சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும்
திருவைந்தெழுத்தேயாகும்.
கு-ரை:
உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. ஆர்வம் - ஆசை.
அங்கையில் - அழகிய கையிலே. அக்குமாலை கொடு - உருத்திராக்கச்
செபமாலை கொண்டும். (அங்கையில் - விரல் இடையினாலும்). எண்ணுவார்
- செபிக்கிறவர்களை. (தகுதியற்றவர்கள் ஆயினும்) தக்க - தகுதிவாய்ந்த.
வானவராய் - தேவர்களாய். தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது. நக்கன்
-ஆடையிலியாகிய சிவபெருமான். நாமம் நமச்சிவாயவே.
|