3397. |
பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு |
|
பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது
காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ
டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம்
பேணுமினே. 4 |
3398. |
நச்சர வச்சடைமே னளிர் திங்களு |
|
மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு
வேந்திநல்ல |
ஊர்தோறும் சென்று
பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக் கொண்டவன்.
அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக
நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக.
கு-ரை:
மாணி - பிரமசாரி, மார்க்கண்டர். செற்று - கொன்று.
காணிய - காணும்படி. ஊர்வழி கலந்து என்க. ஊன் - உண்ணுதல்.
4.
பொ-ரை: நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற
விடமானது பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள்
அனைவரும், பெருமானே! காப்பாற்றுவீர்களாக என்று பிரார்த்திக்க,
அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.
கு-ரை:
மிண்ட - அதிகரிக்க. இதுகா - இதனின்றும் காத்தருள்க.
ஐந்தனுருபுத்தொகை. ஓரிடத்தே - கண்டமாகிய ஓரிடத்தே, கரந்தான்.
5.
பொ-ரை: இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடைமுடியில்
தரித்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன் ஒன்றி இருக்குமாறு
செய்தவன். அழகிய இடபவாகனத்தின் மீது அமர்ந்து
|