|
இச்சை
பகர்ந்துமிக விடு மின்பலி
யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம்
பேணுமினே. 5 |
3399. |
பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம் |
|
வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை
தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ
டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம்
பேணுமினே. 6 |
அச்சம் தரும் மழுப்படையை
ஏந்தியவன். இன்மொழிகள் பேசி மிக
இடுங்கள் என்று நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக!
கு-ரை:
நச்சரவம் - நச்சு + அரவம். நளிர் - குளிர்ந்த. அங்கு -
அசை.
போர்த்தாய்
அங்கு ஓர் ஆனையின்தோல் என்புழிப்போல்
(தி.4.ப.1.பா.10.) அச்சம் எழ மழு ஏந்தி என்க, மிக இச்சை பகர்ந்து
எனவும், பலிஇடுமின் எனவும் மாற்றுக.
6.
பொ-ரை: இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய
மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன். சிவந்த
சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன். ஒற்றை இடபவாகனம் ஏறினவன்.
உமாதேவியோடு அவன் வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
கு-ரை:
பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன். பெற்றொன்றேறி
என வருதலும் காண்க. (தி.2. ப.80. பா.8.) பெற்றிமையால் - தன்மையோடும்.
|