பக்கம் எண் :

812திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி
     யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                      7

3456. கரமிரு பத்தினாலுங் கடு வன்சின
       மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி
     செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு
     பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                     8


போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன். ஞானிகள்
புலன்களை வெல்லும்படி செய்பவன். எம் தலைவனான அச்சிவ பெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கன்றிய - (மார்க்கண்டேயரைக்) கோபித்த. உருள, வாய்
அலறிப் பொன்ற - இறக்க முனிந்த பிரான். கனல்வாய் - பிறர்க்கு
நெருப்பைக் கக்கும் வாய் இங்கு அலறிற்று என்றது ஒருநயம். ‘கன்றிய
காலன்’ (தி.4.ப.26.பா.8) அப்பர் பெருமான் திருவாக்கிலும் அமைகிறது.
ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு ஐம்புலன்களையும் வெல்லுவித்தவன்
என்க. “பொறிவாயிலைந்த வித்தான்” என்ற திருக்குறளுக்கும் இப்பொருள்
நேரிது. பிறவினை விகுதி தொக்கு நின்றது.

     8. பொ-ரை: பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன்,
தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப்
பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான். அவன்
தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன். தன்
திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன்
விளங்கும்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: இருபதினாலும் - இருபத்தினாலும் என்றது விரித்தல் விகாரம்.
கடு(ம்) வன் சினம் - மிகவலிய கோபம். “கடி” என்னும்