பக்கம் எண் :

818திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3464. விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை
       மங்கையொடும்
நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை
     சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணி
     யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
     யீச்சரமே.                       5


திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலை மிகவும் போற்றி
வழிபடுவீர்களாக!

     கு-ரை: சூழ் தரு - பற்றிவிடாது சூழ்ந்த, வல்வினையும் (எளிதில்
நீங்காத) வலிய வினைகளும். “பற்றி நின்ற வல்வினை” என்பர்
அப்பர்பெருமான். உடன் தோன்றிய - உடலோடு தோன்றிய. பல் பிணி -
பல நோய்களும். “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என்பது மூதுரை.
ஏத்துமின் - துதியுங்கள். அனல் பொங்கு அரவும் - விடம் பொங்கும்
அரவும். தாழ் - தொங்குகின்ற; சடையான். இடமாகிய தாடகையீச்சரத்தை
ஏத்துமின் என்க.

     5. பொ-ரை: சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை
உடையவன். வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு
நள்ளிருளில் திருநடனம் புரிபவன். எங்கள் தலைவனான சிவபெருமான்
விரும்பி வீற்றிருந்தருளும் இடம், படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற
நவரத்தினமணிகளோடு, அலைகள் பலவகையான மணிகளை அடித்துக்
கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த
திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும்
திருக்கோயிலாகும்.

     கு-ரை: இருள் - மகாசங்கார காலத்தில் எங்கும் இருள் மயமாய்
இருத்தலின் இருள் என்றார். (அக்காலத்தில் நடம்புரிவர் என்பர்) இதனை
“நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” (திருவாசகம். 1. அடி. 89)
காண்க. இறைவி காண்பவளாய்த் தான் ஆடுபவனுமாய் அமைதலின்
“வெள்வளை மங்கையொடும் நடம்புரி கொள்கையினான்” என்றார்.
படம்புரி - படத்தை விரிக்கின்ற; நாகம். புரிதல், செய்தல், பொதுவினை
சிறப்பு வினைக்கு ஆயிற்று. நாகமொடு - நாகரத்தினங்களுடன் (பல
இரத்தினங்களையும்) அலை - அடித்து