3516. |
பகலொளிசெய்
நகமணியை முகைமலரை |
|
நிகழ்சரண
வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையிலறு முகவிறையை
மிகவருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழவெழி றிகழநிக
ழலர்பெருகு புகலிநகரே.
3 |
கு-ரை:
ஆணு - (தன்) அன்பர்களாகிய தேவர்கள். வியர் பேணு
மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. காணும் அளவில் -
அறிந்ததும். தாணு - சிவபெருமான். மிகு - வலிமை மிகுந்த. ஆண்
இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. (நிற்க -
அதற்கேற்ப.) கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட
கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி.
பிடி - பெண்யானையின் உருவை. மாணி - பெருமையையுடையவளாய்க்
காண. மது - மது என்ற அசுரனும். நாணும் வகை ஏணு - வெட்கும்படி
வலிமைகொண்ட. கரி - கயமுகாசுரன். பூண் - தான் மேற்கொண்ட தீய
தொழில்கள். அழிய - அழியும்படி. ஆண் - ஆண் தகையாகிய விநாயகக்
கடவுள். (கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந்
தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர்) இயல் - (அன்பர்க்கு
அனுக்கிரகிக்கும்) அருளை, கொள் - கொள்வித்த. மாணி -
பெருமையுடையோனாகிய சிவபெருமானின். பதி - இடம். சேண் -
வானுலகில் உள்ள, அமரர்கோன் - இந்திரன். வேணு வினை - மூங்கிலை.
ஏணி - ஏணியாகக்கொண்டு. காண்இல் - தான் நேரேகாண முடியாத.
திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு.
நடு - நட்ட, வேணுபுரம் - வேணுபுரமாம். ஆணு - அன்பு; ஆணுப்
பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக சிந்தாமணி. 1002)
3.
பொ-ரை: சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த
நாகரத்தினத்தையும், அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற
திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல
கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள்
நோக்கத்தையுடையவர் சிவபெருமான். அத்தகைய பெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில்
அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற
|