பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)67. திருப்பிரமபுரம்859

3517. அங்கண்மதி கங்கைநதி வெங்கணர
       வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக
     ரெங்களிறை தங்குமிடமாம்


தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும்
திருத்தலமாகும். தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர்
பெற்றது.

     கு-ரை: பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும். நகம்
மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். முகை மலரை
- அரும்பு விரிந்த செந்தாமரை (நாண்) மலரையும். நிகழ் - போன்ற.
சரண - திருவடிப் பேற்றுக்குரிய. அகவு - விருப்பும் மிக்க. முனிவர்க்கு
- சனகாதி முனிவர்களுக்கு, அகலம்மலி - விஸ்தாரமாகிய, சகலகலை -
கலைகளனைத்தையும். மிக - (தெளிவு) மிகும்படி. உரை செய் -
உபதேசித்தருளிய. முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய. பகவன்
- சிவபெருமானின். இடம் ஆகும். “அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்
அடி” “மணியடி” என்னும் திருவடித் திருத்தாண்டகத்தாலும் முதலடியின்
முற்பகுதி தெளிவாம், முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் -
சிவபெருமான் ஒருவர்க்கே உண்மையில் உள்ளது, ஏனைக் கடவுளர்க்கு
உபசாரமாத்திரையே. “முகந்தான் தாராவிடின் முடிவேன்
பொன்னம்பலத்தெம் முழுமுதலே”-என்னும் திருவாசகத்தில் (கோயில் மூத்த
திருப்பதிகம் 3) முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும்
பொருளில் வந்தமை காண்க. பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர்
முதலாயினோரை. “பகை” பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள். மிக - அறச்செயல்கள் அதிகரிக்க. அருள - தர.
அதனால். நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள்.
புக - சரண்புக, எழில் திகழ - அழகு விளங்க. நிகழ் - (இவற்றால்) நேர்ந்த
(புகலியெனும் பெயர்). அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய
(புகலி நகர் என்க.)

     4. பொ-ரை: அழகிய சந்திரனும், கங்கை நதியும், கொடிய
பாம்புகளும், அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப்
போன்ற சடைமுடியில் அணிந்தவர், எங்கள் இறைவராகிய சிவபெருமான்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சூரியனால் விளங்குகின்ற
இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய
அந்தக் கரணங்களின் சேட்டையால்