3637. |
போழுமதி
பூணரவு கொன்றைமலர் |
|
துன்றுசடை
வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு
ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
யென்பர்திரு வேதிகுடியே. 3 |
நடனம் ஆடுவர். தொல்
- முதிர்ந்த. ஆனை - யானையின். உரிவை -
தோலை. மல் புரி புயத்து - மல் யுத்தம் புரியவல்ல தோளில். (எந்நாளும்)
இனிது மேவுவர் - இனியதாக அணிவார். வளர் வானவர் தொழ - அச்சம்
மிகுந்த தேவர்கள் துதிக்க. துற்பு அரிய - உண்ணுதற்கரிய, நஞ்சு அமுதமாக
முன் அயின்றவர் - விடத்தை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர்.
தொகுசீர் இயன்ற - பலவாற்றானும் தொக்க புகழ் பொருந்திய. வெற்பு
அரையன் மங்கை - மலை அரையன் மகளாகிய உமாதேவியாரை. ஒரு
பங்கர் - ஒரு பாகமாகக் கொண்டு அருளியவராகிய சிவபெருமானது, (நகர்
திருவேதிகுடியே) வேதபுருடனுக்குச் சந்தஸ் (இசை) பாதமாகக் கூறப்
படுவதால் பாதமின்றி நடைபெறாமை குறித்தற்குச் சொற்பிரியாத என்பதற்குச்
செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. மற்போர் அருச்சுனனுடன்
நடந்தது. தங்களுக்கு உயிர் அளித்தமை கருதி வானவர் எந்நாளும் தொழ
நஞ்சு அயின்றனரென வரலால் தொழ என்பது காரியப் பொருட்டு. துற்று -
உண்டி. துற்பு - உண்ணல். துன்(னுதல்) புதுற்பு என்றுகொண்டு.
அண்டுதற்கரிய எனினும் ஆம். அயிலல் - உண்ணல்.
3.
பொ-ரை: சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய
பிறைச்சந்திரனை அணிந்தவர். பாம்பு, கொன்றைமலர் இவற்றைச்
சடையிலணிந்த, அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி
உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர். விடம் உண்டதால் கருநிறம்
வாய்ந்த கண்டத்தையுடையவர். தேவலோகத்திலுள்ள மகளிரும், ஆடவரும்
தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர். அழகிய
மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். புலித் தோலாடை அணிந்தவர். அதன்
மேல் யானைத்தோலைப் போர்த்தவர். அத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும்.
|